
ரஜினி முருகன் பட வெற்றி சந்தோஷத்தில் அண்மையில் தனது ரசிகர்களிடம் டுவிட்டரில் பேசியிருந்தார்சிவகார்த்திகேயன்.அதில் ரசிகர்கள் அஜித், விஜய் பற்றி கூறுங்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு சிவகார்த்திகேயன், அஜித் ஒரு உண்மையான பண்புள்ள மனிதர் என்னை உற்சாகப்படுத்திய அவரது வார்த்தைகளையும், அறிவுரையையும் என்னால் மறக்க முடியாது.
விஜய் விருதுகள் வழங்கும் விழாவில் விஜய் சார் கையால் விருது பெற்றது எனது வாழ்க்கையில் சிறந்த தருணங்களில் ஒன்று. என்னிடம் அவர் பேசிய வார்த்தைகள் எனக்கு உற்சாகம் அளிப்பதாக அமைந்தன.
மறக்க முடியாத இந்த வாய்ப்பை உருவாக்கி தந்தவர்களுக்கு நன்றி என கூறியிருந்தார்.
No comments:
Post a Comment